Sunday, July 28, 2013

கணினியை தட்டி நீ ஆயிரம் மென்பொருளை தயாரிக்கலாம். ஆனால், உன்னால் ஒரு நெல்மணியை கூட தயாரிக்க முடியாது.


ஒவ்வொரு நாளும் சராசரியாக 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் கணினியை தட்டி நீ ஆயிரம் மென்பொருளை தயாரிக்கலாம். ஆனால், உன்னால் ஒரு நெல்மணியை கூட தயாரிக்க முடியாது. ...!!

அனைத்து நாடுகளும் விவசாயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது...! ஆனால், நம் நாடோ விவசாய நிலங்களை அழித்து கொண்டிருக்கிறது...! உணவு வாங்க பணம் வேண்டும் அதற்காக விவசாய நிலத்தை விற்றாய், நாளை உன் கையில் பணம் இருக்கும்...

ஆனால், உண்ண உணவு இருக்காது..
பணத்தையும் உண்ண முடியாது...

இந்த நிஜத்தை நாம் என்றுதான் உணர்ப்போகிறோமோ தெரியவில்லை..?! விவசாயத்தின் அழிவு தேசத்தை உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறையையும் அதைத் தொடர்ந்த பஞ்சத்தையும் நோக்கி மெல்ல மெல்ல இழுத்துச் செல்கிறது. விவசாயத்திற்கும் உள்நாட்டுத் தொழில்துறைக்கும் துரோகமிழைத்து நாட்டை மீண்டும் அடிமையாக்கத் துடிக்கும் ஆளும் கும்பலான எட்டப்பர்களை உடனடியாக வீழ்த்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் அழிவை இந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும்.

-அன்புடன் கனகராஜ்


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்